ஜகர்தா: இந்தோனேஷியாவில் மாலுகு தீவில் நேற்று 7.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த உடனடி தகவல் கிடைக்கவில்லை. இந்தோனேஷியா நெருப்பு கோளம் பகுதியில் அமைந்துள்ளதால் அவ்வப்ேபாது நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கை. இந்நிலையில், அங்குள்ள மாலுகு தீவில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6.23 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிமீ ஆழத்தை மையமாக கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.