ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஹல்மஹேரா தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி9.10 மணியளவில் உணரப்பட்டுள்ளது. மாலுக்கு மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள டெர்னேட்டே என்ற நகருக்கு தென்மேற்கில் சுமார் 165 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.