இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஹல்மஹேரா தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி9.10 மணியளவில் உணரப்பட்டுள்ளது. மாலுக்கு மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள டெர்னேட்டே என்ற நகருக்கு தென்மேற்கில் சுமார் 165 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது என அந்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர். நிலநடுக்கத்தால் குடியிருப்பு பகுதியிலிருந்த பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளில் இருந்து வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன.

Related Stories: