கூடைப்பந்து போட்டி எம்ஓபி வைஷ்ணவா சாம்பியன்

ஜேசிஆர் ராகவேந்திரா கூடைப்பந்து கிளப் சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு இடையிலான 23வது கூடைப்பந்து போட்டி சென்னை தி.நகரில் நடைபெற்றது. கல்லூரி பிரிவில் 18 அணிகள் பங்கேற்றன. பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் எம்ஓபி  வைஷ்ணவா கல்லூரி 96-73 என்ற புள்ளிக் கணக்கில் இந்துஸ்தான் நிகர்நிலை பல்கலைக்கழகத்தை வீழ்த்தியது. சாம்பியன் பட்டம் வென்ற எம்ஒபி வைஷ்ணவா கல்லூரிக்கு பரிசுக் கோப்பையுடன் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.  சிறந்த வீராங்கனையாக எஸ்.புஷ்பா தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற அணியை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், உடற்கல்வி இயக்குநர் அமுதா சுமன்குமார், பயிற்சியாளர் என்.சம்பத் ஆகியோர்  பாராட்டினர்.

Related Stories: