செரினிடி கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்

சென்னை: பள்ளிகளுக்கு இடையிலான 2வது ஸ்வெலக்ட் செரினிடி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.இது குறித்து போட்டி அமைப்பாளர் ஷியாம் சுந்தர் கூறியதாவது: பள்ளிகளுக்கு இடையிலான 2வது ஸ்வெலக்ட் செரினிடி கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த உள்ளோம். இம்மாதம் 15ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியில் சென்னையில்  இருந்து 14 அணிகளும், கோவை, மதுரையில் இருந்து தலா ஒரு அணியும் பங்கேற்கின்றன. இந்த 16 அணிகளும் தலா 4 அணிகளை கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெறும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும்  அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். லீக் போட்டிகள் 50 ஓவர்கள் அடிப்படையிலும், அரையிறுதி, இறுதிப் போட்டி 90 ஓவர்கள் அடிப்படையில் நடக்கும். இறுதிப் போட்டி ஆக.7, 8 தேதிகளில் சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு  அரங்கில் நடைபெறும்.இந்தப் போட்டி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடனும், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடனும் நடைபெற உள்ளது.

Related Stories: