சென்னை: பள்ளிகளுக்கு இடையிலான 2வது ஸ்வெலக்ட் செரினிடி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.இது குறித்து போட்டி அமைப்பாளர் ஷியாம் சுந்தர் கூறியதாவது: பள்ளிகளுக்கு இடையிலான 2வது ஸ்வெலக்ட் செரினிடி கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த உள்ளோம். இம்மாதம் 15ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியில் சென்னையில் இருந்து 14 அணிகளும், கோவை, மதுரையில் இருந்து தலா ஒரு அணியும் பங்கேற்கின்றன. இந்த 16 அணிகளும் தலா 4 அணிகளை கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெறும்.