திருவனந்தபுரம்: கேரளாவில் இவ்வருடம் தென்மேற்கு பருவமழை 43 சதவீதம் குறைந்துள்ளது. கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும். இவ்வருடம் ஒருவாரம் தாமதமாக ஜூன் 8ம் தேதி தான் பருவமழை தொடங்கியது. ஆனால் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே மழையின் தீவிரம் குறைய தொடங்கியது.திருவனந்தபுரம், கொல்லம் உட்பட தென்மாவட்டங்களில் மட்டுமே ஓரளவு மழை பெய்தது. வடமாவட்டங்களில் மிகவும் சுமாராகவே மழை பெய்தது. இதன் காரணமாக இடுக்கி, முல்லைப் பெரியாறு உட்பட பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது.