அகமதாபாத்: சமூக ஆர்வலர் அமித் ஜேத்வா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பாஜ முன்னாள் எம்பி டினு சோலங்கி உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம், ஜூனாகத் மக்களவை தொகுதி முன்னாள் எம்பி டினு சோலங்கி. பாஜ.வை சேர்ந்த இவர், ஜூனாகத் பகுதியில் உள்ள கிர் சிங்கங்கள் சரணாலயத்தில் சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுக்கும் தொழில் செய்து வந்தார். இது பற்றிய ரகசியத்தை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சமூக ஆர்வலர் அமித் ஜேத்வா வெளிப்படுத்தினார். இந்நிலையில், 2010ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி அமித் ஜேத்வா நீதிமன்றத்துக்கு வெளியே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.