லக்னோ: ‘பண பலம், அதிகார பலத்தை வைத்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க பாஜ முயற்சிக்கிறது,’ என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரசின் 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜவில் இணைந்துள்ளனர். இதனால், அங்கு மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. இது குறித்து, பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பண பலத்தை தவறாக பயன்படுத்தியும், மின்னணு இயந்திரத்தில் முறைகேடு செய்தும் பாஜ மீண்டும் ஆட்சியை பிடித்தது.