திருவனந்தபுரம்: ஓடும் பஸ்சில் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட டிரைவர், 40 பயணிகளையும் காப்பாற்றிவிட்டு உயிர் விட்டார்.திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (55). கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு உட்பட்ட நெடுமங்காடு டெப்போவில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை கல்லராவில் இருந்து நெடுமங்காட்டுக்கு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். அதே பஸ்சில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அவரது மகள் ஜெயராணியும் பயணம் செய்தார்.