புதுடெல்லி: மக்களவையில் நேற்று திமுக எம்பி கனிமொழி பேசியதாவது: ரயில்வே துறையில் மனித கழிவுகளை மனிதர்களே கையால் அள்ளும் அவலம் தொடர்கிறது. தங்கள் ஊழியர்களை மனித கழிவை அள்ள வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் கூறிவிட்டு, அந்த பணியை ஒப்பந்த பணியாளர்கள் மூலம் செய்து வருகிறது. இந்த அவலம் இன்னும் நீடிப்பது வெட்கக் கேடானது. இந்த நிலையில், மத்திய அரசு புல்லட் ரயிலை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.