புதுடெல்லி: பெரும் கடன் சுமையால் திண்டாடி வரும் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி, தனது சொத்துக்களை விற்று21,700 கோடி நிதி திரட்டி கடன் சுமையை குறைக்க திட்டமிட்டுள்ளார். இவற்றில் ரிலையன்ஸ் இன்ஸ்பராஸ்டெக்சர் லிமிடெட் நிறுவனத்தின் 9 சாலை திட்டங்களை விற்பதன் மூலம் ₹9,000 கோடியும், நிதி தொழிலில் முதலீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து 11,500 கோடியும் திரட்டவும் உத்தேசிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடப்பதாக ரிலையன்ஸ் குழும செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து அனில் அம்பானி கூறுகையில். “ரிலையன்ஸ் குழுமம் தனது சொத்துகளை விற்று திரட்டப்பட்ட நிதியில் கடந்த 14 மாதங்களில் 35,000 கோடிக்கும் மேல் கடனை திருப்பிச் செலுத்தி இருக்கிறோம்’’ என்றார்.