சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நாளை முதல் 29% ஊதிய உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? என செய்யாறு எம்எல்ஏ தூசி கே மோகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மொத்தம் 20,028 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.