நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு: சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நாளை முதல் 29% ஊதிய உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? என செய்யாறு எம்எல்ஏ தூசி கே மோகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மொத்தம் 20,028 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.

அவர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு நிகராக, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஆண்டுக்கு 10 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை, போனஸ், பொங்கல் சிறப்பு தொகை, கருணை தொகை உள்ளிட்டவை வழங்கப்படுவதாகவும் அமைச்சர் பதிலளித்தார். இது தவிர ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் 6,02000 ரூபாய் அளவுக்கு காப்பீடு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் மாற்றியமைக்கப்படுவதாக கூறினார். இந்த நிலையில், நாளை முதல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29% ஊதியம் உயர்த்தி தரப்படவுள்ளதாக கூறினார்.

Related Stories: