மாருதி சுஸுகி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றாக பிரெஸ்ஸா எஸ்யூவி ரக கார் இருக்கிறது. இந்த கார் மலிவு விலையில் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் 15 ஆயிரம் கார்கள் விற்பனையாகிறது. தற்போது, பிரெஸ்ஸா மாடலில் சில அப்டேட்டுகளை செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்தது. அந்தவகையில், புதிய 2019 பிரெஸ்ஸா மாடலில் கூடுதல் வசதியாக சன்ரூப் மற்றும் பக்கவாட்டு பகுதியில் ஏர் போக் உள்ளிட்டவற்றை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த தரமான நடவடிக்கையால், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல், அதன் முந்தைய மாடலை காட்டிலும் பாதுகாப்பிலும் சொகுசிலும் சற்று உயர்ந்துள்ளது. அதேசமயம், இந்த மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றங்களும் இந்த காரில் இடம்பெறவில்லை.வரும் ஜூலை 1-ம்தேதி முதல் அமலாக இருக்கிற ஏஐஎஸ் 145 பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப மாருதி சுஸுகி நிறுவனம் அதன் தயாரிப்புகளை அப்டேட் செய்து வருகிறது. இதற்காக, தனது அனைத்து கார்களிலும் வாகன ஓட்டி ஏர் பேக், சீட் பெல்ட் ரிமைண்டர், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ஸ்பீட் அலர்ட் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளை கூடுதலாக இணைத்து வருகிறது.