ஆலந்தூர்: ஆலந்தூர், வடக்கு ராஜா தெருவை சேர்ந்தவர் சேகர் (55). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல பிரிவு மாவட்ட அமைப்பாளர். இவர், தனது கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் சுவர் விளம்பரம் எழுதி இருந்தார்.இந்நிலையில் இந்த விளம்பரத்தினை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ராமதாசின் ஆதரவாளர்கள் அழித்ததாக கூறப்படுகிறது. அப்போது குடும்பத்தினரோடு அந்த வழியாக காரில் வந்த சேகர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, ‘‘ஏன் தலைவர் விளம்பரத்தை அழிக்கிறீர்கள்” என்று தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், ‘‘நாங்க பிடிச்சு வச்ச இடத்தில நீ எழுதினா விட்டுடுவோமா. இப்படிதான் அழிப்போம்” என கூறியுள்ளனர்.