சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் கையில் பையுடன் ஒருவர் வந்தார். மூன்றாவது கேட் அருகே வந்தபோது திடீரென மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் பாய்ந்து வந்து மண்ணெண்ணெய் கேனை பறித்து அவர் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர்.தகவலறிந்து வேப்பேரி போலீசார் வந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் தெரிய வந்ததாவது: நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையை சேர்ந்தவர் தங்கராஜ் (56). தங்க மயில் என்ற பெயரில் ஓட்டல் நடத்துகிறார். கடை வளர்ச்சிக்காக கடந்த 2017ம் ஆண்டு அசோக் நகரில் பைனான்ஸ் நடத்தி வரும் கண்ணன் என்பவரிடம் ₹4.50 லட்சம் பணம் கந்து வட்டிக்கு பெற்றார். வாங்கிய கடனை சரியாக கட்ட முடியாததால் தனக்கு தர வேண்டிய பணத்திற்கு சில காலம் கடையை கண்ணன் நடத்த விட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ஒவ்வொரு மாதமும் கண்ணன் கடன் வாங்கிய ஓட்டல் உரிமையாளர் தங்கராஜிக்கு ₹10 ஆயிரம் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் சொன்னப்படி கண்ணன் பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது.