சென்னை: காதல் விவகாரத்தில் கல்லூரியிலேயே கல்லூரி மாணவன் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சக மாணவரை போலீசார் கைது செய்தனர். சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் தனியார் சமையல் பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தமிழகம் உட்பட பல்ேவறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர். ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மாவட்டம், காமண்டூர் மண்டல் பாலூர் கிராமத்தை சேர்ந்த செவன்குமார் (20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஹரிஹர சண்முகம் (20) ஆகிய இருவரும் முதலாமாண்டு பிஎஸ்சி கேட்டரிங் பயின்று வந்தனர். இந்நிலையில் செவன்குமார், சென்னையில் பணிபுரியும் ஹரிஹர சண்முகத்தின் சித்தப்பா மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் ஹரிஹர சண்முகத்திற்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹர சண்முகம், செவன்குமாரை பலமுறை கண்டித்தார். ஆனாலும் செவன்குமார் தொடர்ந்து அந்த பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, தனது தங்கையிடம், ‘‘செவன்குமார் மிகவும் ேமாசமானவன். அவனை நீ நம்பாதே’’ என்று கூறியுள்ளார். இந்த தகவலை அவரது தங்கை செவன்குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.