சென்னை: தமிழகத்தில் ஏரி, குளம், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நில அளவை துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
வருவாய் துறை சார்பில் அறிவிக்கப்பட உள்ள புதிய அறிவிப்புகள், நில அளவை துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஆய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நில அளவை துறை இயக்குநர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 32 வருவாய் மாவட்டத்தை சேர்ந்த நில அளவை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.