சென்னை: சட்டப் பேரவையில் ஜூலை 2ம் தேதி கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடப்பதை அடுத்து கல்வி அதிகாரிகள் யாரும் விடுப்பு எடுக்காமல் தலைமையிடத்தில் இருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப் பேரவை கூட்டம் 28ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடக்க உள்ளன. அதில் ஜூலை 2ம் தேதி கல்வி மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது. இதையடுத்து, கல்வி அதிகாரிகள் யாரும் விடுப்பு எடுக்க கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் நேற்று வெளியிட்ட உத்தரவு: