சென்னை: சென்னை நீலாங்கரையில் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி போலீசாரை தாக்கிய நபர் தனது மகன் என, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சர் சி.வி.சண்மூகம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் கடந்த 24ம் தேதி இளம் தொழிலதிபர் நவீன் என்பவர் மது போதையில் காரால் விபத்தை ஏற்படுத்திவிட்டு போலீசாரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் போலீசாரை தாக்கும் நபர் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மகன் என்று சிலர் பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.