இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் பாழடைந்த வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அதிகாரியை பாஜ எம்எல்ஏ கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினார். மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. நேற்று இந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கன்ஜி பகுதியில் பாழடைந்த வீடுகளை இடிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இதற்காக அவர்கள் ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களுடன் அங்கு வந்திருந்தனர். அப்போது வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்தூர் 3 தொகுதியின் பாஜ எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்க்கியா தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.