சென்னை: விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க தடைக்கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தவறான தகவல் பரப்பி, பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதாக கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், பழனிசாமி உள்ளிட்ட 11 விவசாயிகளின் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.