மதுரை: காவலர் குடியிருப்புகளில் தங்கியிருப்பவர்களின் பட்டியலை தயார் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக பலர் தங்கியிருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. தனிக்குழு அமைத்து காவலர் குடியிருப்பில் வசிப்பவர்களின் பட்டியலை தயாரிக்க உத்தரவிடக் கோரி வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ளது.