சென்னை : சென்னையில் முரசொலி அலுவலகத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி கலைஞர் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்க உள்ளார். சென்னையில் பெரியார் திடலில் திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கி. வீரமணி, முரசொலி அலுவலகத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி கலைஞர் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்க இருப்பதாக கூறினார். கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரும் கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க இருப்பதாக கி. வீரமணி குறிப்பிட்டுள்ளார்.