டெல்லி: டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோடி மின்னணு வாக்கு இயந்திரம் பற்றி பேசி வருகின்றார். ஒரு காலத்தில் 2 எம்.பி.க்களைக் கொண்டிருந்த பா.ஜ.க. கடுமையாக உழைத்து மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. நாங்கள் வெற்றி பெறாததற்கு வாக்கு இயந்திரத்தை குறைகூறிக்கொண்டு இருக்கவில்லை என மோடி கூறினார். இப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து கட்சிகள் புகார் கூறுவது ஏன் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.