சென்னை : மழை பெய்வதை பொறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென்ற காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் உத்தரவுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடக அரசு மேற்கொள்ளும் எதேச்சதிகார நடவடிக்கையை தடுத்து நிறுத்த காங். தலைமையுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.