டெல்லி : 2019 மே மாதம் வரை நாடு முழுவதும் சுமார் 123.82 கோடி பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 7.37 கோடி பேருக்கு ஆதார் அட்டை எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உ.பி., ம.பி. மகாராஷ்டிரா, பீகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அதிக ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் சுமார் 20.57 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் குறைந்த அளவாக 72, 597 ஆதார் அட்டை எண்கள் வழங்கப்பட்டுள்ளது.