கோவை: மேட்டுப்பாளையம் அருகே நேற்று காதல் ஜோடி அரிவாளால் வெட்டப்பட்டதில், காதலன் உயிரிழந்த சம்பவத்தில் ஒருவர் சரண் அடைந்துள்ளார். காதல் விவகாரத்தில் தம்பி கனகராஜை கொலை செய்த அண்ணன் வினோத் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். வினோத் அரிவாளால் வெட்டியத்தில் காயம் அடைந்த வர்ஷினி பிரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.