கன்னியாகுமரி: குமரி மாவட்டம் சின்னமுட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேர், நேற்றுமுன்தினம் அதிகாலை விசைப்படகில் ஆழ்கடலுக்குச் சென்றனர். இரவு 10 மணி ஆகியும் கரை திரும்பவில்லை. இதற்கிடையே ஒற்றையால்விளையைச் சேர்ந்த சுபாஷ் என்பவரின் விசைப்படகில் சென்ற மீனவர்கள், ஆழ்கடலில் படகு ஒன்று தத்தளிப்பதை கண்டனர். பின்னர் கயிற்றால் விசைப்படகை கட்டி கரைக்கு கொண்டு வந்தனர். நேற்று இரவு 7.30 மணியளவில் 22 பேருடன் அந்த விசைப்படகு சின்னமுட்டம் வந்து சேர்ந்தது. இன்ஜின் பழுதானதால், 2 நாளாக மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர்.