×

ஆக்கிரமிப்பு அகற்ற கோரி வழக்கு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  கன்னியாகுமரி மாவட்டம், நாராயணத்துவிளைவீடு பகுதியைச் சேர்ந்த பிஜூலால், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: விளவங்கோடு தாலுகா களியல் கிராமத்திலுள்ள ஊரணியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதை அளவீடு செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குமரி கலெக்டர் ஆஜராகி விளக்கமளித்தார். இதையடுத்து, இதுபோன்ற வழக்குகளில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஆக.5க்கு தள்ளி வைத்தனர்.

Tags : removal,aggression, Government, Icort Branch Directive
× RELATED வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளங்கை...