துபாய்: கேரளாவை சேர்ந்தவர் மேரிகுட்டி தாமஸ் (78). இவரது 2வது மகன் ஷினோ (35). துபாயில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஷினோ இறந்தார். அவருக்கு திருமணமாகவில்லை. அதனால், அவர் தனக்கு பின் கிடைக்கும் பண பலன்களுக்கு வாரிசாக தனது தாய், தனது மூத்த சகோதரனை குறிப்பிட்டு இருந்தார்.இதனால், ஷினோ இறந்த பிறகு அவரது வங்கி சேமிப்பு, பண பலன்களைபெறுவதற்காக அவரது சகோதரர் முயற்சி செய்தார். ஆனால், ஒரே ஆண்டில் அவரும் இறந்தார். இதனால், மனமுடைந்த மேரிகுட்டி, ஷினோவின் பணப் பலன்களை பெறும் முயற்சியை கைவிட்டார்.