புதுடெல்லி: ஒரு மாநிலத்தில் அலுவலகம்; இன்னொரு மாநிலத்தில் வர்த்தகம் என்று நடத்தும் நிறுவனங்களுக்கு இரண்டுக்கும் சேர்த்து தான் ஜிஎஸ்டி வரி போடப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக அரசு விரைவில் முடிவு எடுக்க உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அதன் ஒப்புதல் பெற்று இது தொடர்பாக சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விரைவில் அனுப்பப்படும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மனித வளம், ஊழியர்களுக்கான சம்பள பட்டியல் தயாரிப்பு போன்ற அலுவலகத்திற்குள்ளான பணிகள் ஜிஎஸ்டி விதிகளின் படி தான் கணக்கிடப்படும். இந்த அலுவலகம் இன்னொரு மாநிலத்தில் உள்ள நிறுவனத்தின் அங்கம் என்றாலும், இதன் சேவைகளுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுத்த வேண்டும் என்று கவுன்சில் நினைக்கிறது.