கிளினிக்கில் ரூ.4.5 லட்சம் கொள்ளை சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளி சிக்கினான்

சென்னை: மயிலாப்பூரில் கிளினிக் உட்பட 5 கடைகளின் பூட்டை உடைத்து ₹4.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சிசிடிவி கேமரா பதிவு மூலம் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூரை சேர்ந்த டாக்டர் தியாகராஜன் என்பவர் மந்தைவெளி மாதா சர்ச் சாலையில் கிளினிக் மற்றும் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். கடந்த 17ம் ேததி நள்ளிரவு இவரது கிளினிக், மெடிக்கல் ஷாப் மற்றும் அருகில் இருந்த காய்கறி கடை உள்ளிட்ட 5 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ₹4.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

இதுகுறித்து டாக்டர் தியாகராஜன் உள்ளிட்டோர் கொடுத்த புகாரின் பேரில், மயிலாப்பூர் மற்றும் பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மயிலாப்பூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில் சிங் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு குற்றவழக்கில் தொடர்புடைய கலங்கரை விளக்கம் பிளாட்பாரத்தில் வசித்து வரும் மார்க்ஸ் (27) என்பவன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவனை நேற்று கைது செய்து, அவனிடம் இருந்து ₹65 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: