கொழும்பு: இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 176 பிள்ளைகள் பெற்றோரை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி 3 தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 7 இடங்களில் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 258 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவங்களில் 176 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக கத்தோலிக்க தேவாலய தலைவர் கார்டினர் மால்காம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளதாக அந்நாட்டின் டெய்லி மிரர் என்ற பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.