வலைப்பயிற்சியில் புவனேஷ்வர்

பாகிஸ்தான் அணியுடன் நடந்த உலக கோப்பை லீக் ஆட்டத்தின்போது இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார். அவர் அந்த போட்டியில் 2.4 ஓவர் மட்டுமே பந்துவீசியது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஆப்கானிஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் புவனேஷ்வர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், மான்செஸ்டரில் இந்திய அணி வீரர்கள் நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். உள்ளரங்கில் நடந்த இந்த பயிற்சியின்போது உடற்பயிற்சி நிபுணர், அணி மருத்துவர் மற்றும் கேப்டன் கோஹ்லி ஆகியோரது கண்காணிப்பின் கீழ்  புவனேஷ்வர் எந்தவித சிரமமும் இன்றி அரை மணி நேரம் பந்துவீசினார். எனினும், வெஸ்ட் இண்டீசுடன் நாளை நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் அவர் களமிறங்குவது உறுதி செய்யப்படவில்லை.

Related Stories: