உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு 286 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 286 ரன்களை இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகப்பற்றமாக கேப்டன் பின்ச் 100 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் 286 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

Related Stories: