கோவை: கோவை விளாங்குறிச்சியில் இரண்டரை வயது பெண் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் தாய்மாமன் ரகுநாத் கைது செய்யப்பட்டுள்ளான். குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் காஞ்சனாவின் பெரியப்பா மகன் ரகுநாத் கொன்றது அம்பலமாகியுள்ளது. பாலியல் நோக்கத்தோடு குழந்தையை ரகுநாத் தூக்கிச்சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.