சென்னை: அவசர ஆலோசனை இல்லை, திட்டமிட்டுதான் நிர்வாகிகளுடன் ஆலோசித்தேன் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். சென்னையில் தங்க தமிழச்செல்வன் விவகாரம் பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தங்க தமிழ்ச்செல்வன் பேசியது தொடர்பாக நிர்வாகிகள் புகாரளித்தனர். அமமுகவில் இருந்து அவரை நீக்க எனக்கு அச்சமில்லை. புதிய கொள்கை பரப்பு செயலாளரை விரைவில் அறிவிக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.