×

ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு ; 39 பேர் படுகாயம்...!

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். ஜார்கண்ட் மாநிலம் கார்ஹ்வா பகுதியில் இருந்து சட்டீஸ்கருக்கு பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது கார்ஹ்வா பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 39 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்த  மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக போலீசார் கூறுவதாவது; மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும், இன்னும் விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.

இதேபோல் கடந்த ஜூன் 10 ஆம் தேதி ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டம் பாட்னாவிலிருந்து புறப்பட்ட பேருந்து இரும்பு ஏற்று வந்த டிரெய்லர் -டிரக் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : bus accident ,Jharkhand , Jharkhand, Bus Accident
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர்...