காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 51 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அவர்களை அடக்க ஆப்கானிஸ்தான் ராணுவம் போராடி வருகிறது. இந்நிலையில் குனர் மாகாணத்தில் ராணுவ படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.