சென்னை: ஸ்மார்ட் பள்ளிகள் திட்டம் தொடர்பாக மத்திய நகர்ப்புற விவகாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வு செய்தனர். பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவியுடன் சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் பள்ளிகள் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இந்த திட்டத்தின்படி மண்டலத்திற்கு ஒரு பள்ளி வீதம் 15 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றம் செய்யப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ₹95.25 கோடி. இதில் ₹76.2 கோடியை பிரான்ஸ் மேம்பாட்டு முகமை அளிக்கும். மீதமுள்ள தொகை மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். பள்ளி வளாகங்கள் அனைத்தும் இயற்கை சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றப்படும். சோலார் பேனல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். பள்ளிகளில் ேதாட்டம் மற்றும் கட்டிடங்களின் மாடிகளில் மாடித் தோட்டம் அமைக்கப்படும். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கேற்பு இருக்கும். அதிக அளவில் ஆய்வு கூடங்கள் ஏற்படுத்தப்படும். இந்த ஆய்வு கூடங்கள் அனைத்தும் சர்வதேச தரத்தில் இருக்கும். இரண்டாவது கட்டமாக மாணவர்களின் கற்றல் திறனை ேமம்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்படும். பல்வேறு தலைசிறந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை கொண்டு தொழிற்கல்வி வழங்கப்படும்.