தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜூலை 2ம் தேதி ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

சென்னை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டம்  சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தில் நடந்தது. மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் சிவபுண்ணியம், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினர். அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, அகில இந்திய செயலாளர் ராஜா  எம்.பி, மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் முத்தரசன், மாநில துணைச் செயலாளர் சுப்பராயன் எம்.பி, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன், மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், பொருளாளர் ஆறுமுகம்  முன்னாள் எம்.எல்.ஏ, செல்வராஜ் எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில், ஆண்டுதோறும் தூர்வார நிதி ஒதுக்கப்பட்டாலும், நீர்நிலைகள் மேடிட்டும், ஆக்கிரமிப்புக்கு  ஆளாகியும், நீர்வரத்துப் பாதைகள் அடைபட்டும் கிடப்பது கண்கூடு. மக்களின் முழு ஒத்துழைப்போடு போர்க்கால வேகத்தில் தமிழகத்தின்  நீர்நிலைகள் அனைத்தையும் தூர்வாரி, வரும் மழைக்கு முன் ஆயத்த நிலையில் வைப்பது அவசியம்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 2ம் தேதியன்று அனைத்து மாவட்டங்களிலும், ஒன்றியங்கள், வார்டுகள், கிராமங்கள், தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: