சென்னை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தில் நடந்தது. மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவபுண்ணியம், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினர். அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, அகில இந்திய செயலாளர் ராஜா எம்.பி, மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் முத்தரசன், மாநில துணைச் செயலாளர் சுப்பராயன் எம்.பி, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன், மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், பொருளாளர் ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ, செல்வராஜ் எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.