திருச்சி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை அரசு இன்னும் விலக்கி கொள்ளாததால் மீண்டும் போராட்டத்தில் குதிப்பதா, அல்லது வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வதா என முடிவெடுக்க ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக்குழு வரும் 30ம் தேதி சென்னையில் நடக்கிறது என ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறினர்.இதுகுறித்து ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறுகையில், புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைகளுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதற்காக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்யும் என எதிர்பார்த்தோம். ஆனால் இன்னும் ரத்து செய்யவில்லை.