சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே, நடுக்கோம்பை பகுதியில் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 மாதமாக இப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை. இதனால், இப்பகுதி மக்கள், அருகில் உள்ள விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது, கிணறுகளிலும் தண்ணீர் வற்றி விட்டதால், விவசாய தோட்டத்திற்குள் செல்லவே விவசாயிகள் அனுமதி மறுத்து வருகின்றனர். இதுகுறித்து மீண்டும் ஊராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.