பூந்தமல்லி: பார்சல் கம்பெனி உரிமையாளர் கழுத்தில் துப்பாக்கி வைத்து கொலை மிரட்டல் விடுத்த டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அருகே செந்நீர்குப்பத்தை சேர்ந்தவர் குல்பிப்சிங் (34). இவர் அதே பகுதியில் பார்சல் சர்வீஸ் கம்பெனி நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சுனில்குமார் (22) என்பவர் அப்பகுதியில் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு பார்சல் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட பார்சல்களில் 2 பார்சல்கள் மாயமானது. இதனால் பார்சல் எடுத்து செல்லும் கட்டணம் 7 ஆயிரம் ரூபாயை கொடுக்காமல் குல்பிப்சிங் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.