×

கார் உதிரிபாகம் தயாரிப்பு கம்பெனியில் தீ விபத்து

பெரம்பூர்: பாரிமுனை மண்ணடி ஜோன்ஸ் தெருவில், கார் உதிரிபாகம் மற்றும் கார் பெயின்ட் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. 2 மாடி கட்டிடத்தில் செயல்படும் இந்த கம்பெனியில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கம்பெனியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைபார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, வஉசி நகர், கொண்டித்தோப்பு பகுதிகளில் இருந்து தீயணைப்பு  வீரர்கள் விரைந்து வந்து, சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் உள்ளே இருந்த பெயின்ட், கார் உதிரிபாகங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து, எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : car parts ,company , Car spare parts, company, fire
× RELATED உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்க...