கணவரை தாக்கினேனா? சசிகலா புஷ்பா மறுப்பு

அவனியாபுரம்: கணவரை தான் தாக்கியதாக  தன் மீது அவதூறு பரப்புகிறார் கள் என்று சசிகலா புஷ்பா நேற்று கூறினார். அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக கடந்த 2014ல் சசிகலா புஷ்பா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர், டி.டி.வி.தினகரனின் அமமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். நேற்று மதுரை வந்த சசிகலா புஷ்பா எம்பி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசை, மத்திய அரசு பல்வேறு விஷயங்களில் நிர்ப்பந்தப்படுத்தி வருகிறது. எனக்கும், எனது கணவர் ராமசாமிக்கும் எந்த பிரச்னையும் இல்லை.

நான் அவரை தாக்கியதாக கூறுவது, என் மீது அவதூறு பரப்பும் செயலாகும். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்கள் மீது அவதூறு பரப்புவதை தடுக்க பெண்கள் தனியாக ஒரு அமைப்பை உருவாக்கும் சூழல் உருவாகி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவரது கணவர் ராமசாமி கூறும்போது, ‘‘சமூக வலைதளங்களில் எங்கள் மீது அவதூறு பரப்பியவர்களுக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: