லஞ்ச ஒழிப்பு போலீசில் தாசில்தாரை பிடித்து கொடுத்தவரை தாக்கியவர் கைது

செஞ்சி:  செஞ்சி அடுத்த புளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல்(41). இவர் ஏரியில் வண்டல் மண் எடுக்க செஞ்சி தாசில்தார் ஆதிபகவனிடம் மனு கொடுத்தார்.  இதற்கு அவர் 8 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை தாசில்தார் வாங்கியபோது கைது செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பாக்கம் கிராம உதவியாளர் சங்கர்(41), வடிவேலுவை வழிமறித்து தாக்கியுள்ளார்.  அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: