செஞ்சி: செஞ்சி அடுத்த புளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல்(41). இவர் ஏரியில் வண்டல் மண் எடுக்க செஞ்சி தாசில்தார் ஆதிபகவனிடம் மனு கொடுத்தார். இதற்கு அவர் 8 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை தாசில்தார் வாங்கியபோது கைது செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பாக்கம் கிராம உதவியாளர் சங்கர்(41), வடிவேலுவை வழிமறித்து தாக்கியுள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.