புதுடெல்லி: ரிசர்வ் வங்கி உபரி நிதியை அரசுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான 6 உறுப்பினர் குழு மீண்டும் மறுத்துவிட்டது. இந்த குழு தனது அறிக்கையை கடந்த சமர்பித்து இருக்க வேண்டும். ஆனால், இந்த இழுபறியால் அறிக்கை சமர்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கியிடம் கூடுதலாக உள்ள நிதியை மத்திய அரசுக்கு வழங்க, தற்போது உள்ள வழிகாட்டு விதிமுறைகளின்படி பரிசீலனை செய்து முடிவு எடுப்பதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது.