பாரிஸ்: பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட இங்கிலாந்து அணி தகுதி பெற்றது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் (ரவுண்ட் ஆப் 16) கேமரூன் அணியுடன் மோதிய இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் ஹவுட்டன் (14வது நிமிடம்), ஒயிட் (45’+4’), கிரீன்வுட் (58’) ஆகியோர் கோல் அடித்தனர். கேமரூன் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினாலும், பதற்றத்தால் பல கோல் வாய்ப்புகளை வீணடித்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது.