டெல்லி: வாட்ஸ் அப் நிறுவனம் ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் வாட்ஸ்-அப் செயலி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் செயலியை கடந்த 2014-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இதற்கிடையே, வாட்ஸ் அப் நிறுவனம் வாடிகையாளர்கள் அவப்போது புதிய வசதியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சாட்டிங்கை விட்டு வெளியேறினாலும் வாட்ஸ் ஆப்பில் உள்ள வீடியோ பின்னணியில் பிளே செய்வது தடை படாத வகையில் புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.