டிக்-டாக் ஆர்வத்தால் கழுத்து எலும்பை முறித்த கர்நாடகா இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பெங்களூரு: டிக்-டாக் ஆர்வத்தால் கழுத்து எலும்பை முறித்துக் கொண்ட கர்நாடகா இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கர்நாடகா மாவட்டம் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் குமார். டிக்-டாக் செயலியை பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்ட இவர், தாம் ஆடிய நடனம், பாடல் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். சமீபத்தில் பின்னோக்கி கரணம் அடிக்கும் வீடியோவை பதிவு செய்ய முயன்ற குமார், எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் கழுத்தெலும்பில் படுகாயம் ஏற்பட்டது.

பின்னர் அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். முதுகெலும்பு மற்றும் கழுத்தெலும்பில் படு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்திருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி குமார், உயிரிழந்தார். இந்த சம்பவம் டிக்-டாக் ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: