பெங்களூரு: டிக்-டாக் ஆர்வத்தால் கழுத்து எலும்பை முறித்துக் கொண்ட கர்நாடகா இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கர்நாடகா மாவட்டம் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் குமார். டிக்-டாக் செயலியை பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்ட இவர், தாம் ஆடிய நடனம், பாடல் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். சமீபத்தில் பின்னோக்கி கரணம் அடிக்கும் வீடியோவை பதிவு செய்ய முயன்ற குமார், எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் கழுத்தெலும்பில் படுகாயம் ஏற்பட்டது.